ஜூலை 4: இன்று என்ன? - விவேகானந்தர் நினைவு தினம்

ஜூலை 4: இன்று என்ன? - விவேகானந்தர் நினைவு தினம்
Updated on
1 min read

மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் 12.01.1863 அன்று பிறந்தவர் சுவாமி விவேகானந்தர். அவரின் இயற்பெயர் நரேந்திரநாத் தத்தா.

ஆன்மிகத்தில் மிகுந்த ஈடுபாடு ஏற்பட்டு ராமகிருஷ்ண பரமஹம்சரின் சீடரானார். 1893-ல் அமெரிக்காவின் சிகாகோ நகரில் ஆற்றிய சொற்பொழிவு மிகவும் பிரசித்தி பெற்றது. "செயல் நன்று, சிந்தித்து செயலாற்றுவதே நன்று.

உனது மனதை உயர்ந்த லட்சியங்களாலும், சிந்தனைகளாலும் நிரப்பு. அவற்றை ஒவ்வொரு நாளின் பகலிலும் இரவிலும் உன் முன் நிறுத்து; அதிலிருந்து நல் செயல்கள் விளையும்" என்று தன்னம்பிக்கைக்கு மறுபெயராக உயர்ந்து நின்றவர்.

இந்திய மக்களுக்கு ஆன்மீக ஞான ஒளியை புகட்டுவதில் பெரும் பங்கு வகித்த சுவாமி விவேகானந்தர் 04.07.1902 அன்று மரணம் அடைந்தார்.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in