Published : 06 Dec 2019 07:00 AM
Last Updated : 06 Dec 2019 07:00 AM

இன்று என்ன நாள்?- ருக்மிணி லட்சுமிபதி பிறந்த தினம்

இந்திய சுதந்திர போராட்ட வீராங்கனை ருக்மிணி லட்சுமிபதி. இந்திய தேசிய காங்கிரசில் இருந்தவர். சென்னை மாகாண சட்டப்பேரவைக்கு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பெண் எம்எல்ஏ மற்றும் முதல் பெண் அமைச்சர் என்ற பெருமை பெற்றவர்.

சென்னை பெண்கள் கிறிஸ்தவக் கல்லூரியில் பி.ஏ. பட்டம் பெற்றார். இவரது கணவர் டாக்டர் அசண்ட லட்சுமிபதி. கடந்த 1926-ல் பாரிசில் நடந்த சர்வதேச பெண்கள் வாக்குரிமை மாநாட்டில் கலந்து கொண்டார். உப்பு சத்தியாக்கிரக போராட்டத்தில் ஈடுபட்டு ஓராண்டு சிறையில் அடைக்கப்பட்டார். உப்பு சத்தியாகிரக இயக்கத்தில் சிறை சென்ற முதல் பெண் இவர்தான். சென்னை எழும்பூரில் உள்ள மார்ஷல் சாலைக்கு ‘ருக்மிணி லட்சுமிபதி சாலை’ என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. இவர் நினைவாக 1997-ல்அஞ்சல் தலை வெளியிடப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x