Published : 04 Dec 2019 07:32 AM
Last Updated : 04 Dec 2019 07:32 AM

இன்று என்ன? - கப்பற்படை தினம்

கோப்புப்படம்

இந்தியாவின் முப்படைகளில் ஒன்று கப்பற்படை. போர் வேளைகளில் கப்பற்படையின் பங்கு அளப்பரியது. கடந்த 1971-ம் ஆண்டு இந்தியா - பாகிஸ்தானுக்கு இடையே நடந்த போரில் பாகிஸ்தானின் துறைமுக நகரம் என்று அழைக்கப்படும் கராச்சி நகரின் மீது இந்திய கப்பற்படை தாக்குதல் நடத்தியது.

இந்த போரில் கிடைத்த வெற்றியை நினைவுகூரும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 4-ம் தேதி இந்திய கப்பற்படை தினம் கொண்டாடப்படுகிறது.

தவிர மற்ற ராணுவப் பிரிவுகளுடன் ஒருங்கிணைந்து, போர் மற்றும் அமைதி ஆகிய 2 கால கட்டங்களிலும் இந்திய மக்கள் மற்றும் கடல் சார்ந்த உரிமை ஆகியவற்றுக்கு எல்லைகளில் ஏற்படும் அச்சுறுத்தல்களையும், ஆக்கிரமிப்புகளையும் தடுப்பது மற்றும் முறியடிப்பது ஆகிய பணிகளில் கப்பற்படையினர் ஈடுபடுகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x