Published : 15 Nov 2019 09:39 AM
Last Updated : 15 Nov 2019 09:39 AM

இன்று என்ன? - வினோபா பாவே நினைவு தினம்

காந்தியின் வாழ்க்கையில் காணப்படும் முக்கியமான மனிதர்களில் ஒருவர் வினோபா பாவே. போராட்டமே வாழ்க்கையாக இருந்த வேளையில் அறத்துக்காகவும் மனித உரிமைக்காகவும் தன் வாழ்க்கையை அர்ப்பணித்தவர். இவர் 1895-ம் ஆண்டு செப்டெம்பர் 11-ம் தேதி மகாராஷ்டிர மாநிலம் ககோஜி கிராமத்தில் பிறந்தார்.

பாவே முன்னெடுத்த பூமிதான இயக்கம் மூலம் நிலம் இல்லாத மக்களுக்கு நிறைய நிலம் வைத்திருப்பவர்கள் கொடையாக வழங்குவதை இலக்காக வைத்து 1951-ல்
பூமிதான இயக்கம் தொடங்கினார்.

நாடு முழுவதும் 13 ஆண்டுகள் நடை பயணத்தின் மூலம் 2,95,054 ஏக்கர் நிலத்தை இயக்கத்துக்காக தானமாக பெற்றார். பின் 1982-ம் ஆண்டு 15-ம் தேதி காலமானார். மத்திய அரசால் 1983-ல் பாரத ரத்னா வழங்கப்பட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x