

செவ்வாய் கிரகத்தை ஆராய, இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ) ‘மங்கல்யான்’ என்ற திட்டத்தை கொண்டு வந்தது. அதன்படி கடந்த 2013-ம் ஆண்டு நவம்பர் 5-ம் தேதி மங்கல்யான் என்ற ஆளில்லாத விண்கலத்தை ஆந்திர மாநிலம் ஹரிகோட்டா விண்வெளி ஏவு தளத்தில் இருந்து விண்ணில் செலுத்தியது. திட்டமிட்டபடி இந்த விண்கலம் ஓராண்டுக்குப் பின்னர் 2014 செப்டம்பர் 24-ம் தேதி அன்று செவ்வாய் கிரகத்தின் சுற்றுப்பாதையில் வெற்றிகரமாக இணைந்தது.
இதன்மூலம், முதல் முயற்சியிலேயே செவ்வாய் கிரகத்துக்கு செயற்கைக் கோளை வெற்றிகரமாக அனுப்பிய முதல் நாடு என்ற பெருமையை இந்தியா பெற்றது. இந்தத் திட்டத்தை மிகக் குறைந்த செலவில் வெற்றிகரமாக நடத்தி காட்டியது இஸ்ரோ.