இன்று என்ன? - இந்தியா பற்றி ஆய்வு செய்த அமெரிக்கர்

இன்று என்ன? - இந்தியா பற்றி ஆய்வு செய்த அமெரிக்கர்
Updated on
1 min read

அமெரிக்க கல்வியாளர் லாயிட் ருடால்ப் சிகாகோவில் 1927 நவம்பர் 1-ம் தேதி பிறந்தார். எல்ஜின் பள்ளியில் படித்தார். 1948 -ம் ஆண்டு ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் இளங்கலைப் பட்டம் பெற்றார். 1950-ல் எம்பிஏ பட்டம் பெற்றார். பின்னர் 1956-ல் ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் ஆய்வு பட்டம் பெற்றார்.

18-ம் நூற்றாண்டில் இங்கிலாந்திலும் அமெரிக்காவிலும் அரசியல் கட்சிகளின் நிலைமைகள் பற்றி ஆய்வு மேற்கொண்டார். 1964 முதல் சிகாகோ பல்கலைக்கழகத்தில் 34 ஆண்டுகள் பேராசிரியராக பணியாற்றினார். 2002-ல் ஒய்வு பெற்றாலும் மதிப்பு பேராசிரியராகத் தொடர்ந்து வேலை செய்தார்.

இந்திய முதலாளித்துவம், மகாத்மா காந்தியின் கொள்கைகள், வழிமுறைகள் பற்றியும் நூல்கள் எழுதினார். 1984-ல் ‘இந்தியாவில் பண்பாட்டு அரசியல்’, 1994-ல் ‘ராஜஸ்தான் பற்றிய எண்ணங்கள்’ உள்ளிட்ட புத்தகங்களை எழுதினார். ருடால்பின் எழுத்துகளை ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக பதிப்பகம் மூன்று தொகுப்புகளாக வெளியிட்டுப் பெருமைப்படுத்தியது. இந்தியா பற்றிய ஆய்வுப் பணிகளைப் பாராட்டி பத்ம பூஷன் விருது வழங்கி இந்திய அரசு கவுரவித்தது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in