Published : 09 Feb 2023 06:10 AM
Last Updated : 09 Feb 2023 06:10 AM

ப்ரீமியம்
வாழ்க்கைக் கல்விக்கூடமாக மாறிய வகுப்பறை

செ.பு.பனிமலர்

திருச்சி மாவட்டம் சமயபுரம் எஸ்.ஆர்.வி. சி.பி.எஸ்இ பள்ளியின் ஒன்பதாம் வகுப்புதான் எங்களது வகுப்பறை. ஒருநாள் முதல் பாடவேளையில் எங்கள் வகுப்பறையின் சூழல் வழக்கம்போல் இல்லை. எங்களது வகுப்பாசிரியராகவும் தமிழாசிரியராகவும் பணியாற்றும் ஐயா அப்பாடவேளையில் புத்தகத்தில் இருக்கும் பாடத்தை எங்களுக்குக் கற்பிக்கவில்லை. மாறாக வாழ்க்கைப் பாடத்தைக் கற்பித்தார். மாணவர்களிடையே புகைந்து கொண்டிருந்த சண்டையும் சச்சரவும்தான் அதற்குக் காரணங்கள்.

அன்றைய தினத்தில் எங்கள் ஐயா வகுப்பறைக்குள் நுழையும்போது அவர் முகத்தில் ஆழ்ந்த யோசனையும் மனக்கவலையும் குடி கொண்டிருந்தது. ஒவ்வொரு மாணவரையும் எழுப்பி இந்த வகுப்பறையில் உனக்குப் பிடித்தவை, பிடிக்காதவை, உனக்கு இருக்கும் பிரச்சினைகள் குறித்து மனம் விட்டுப் பேசு என்று கூறினார். ஐயாவின் குரலில் இருந்த கண்டிப்பும் கனிவும் மாணவர்களை மனம் திறந்து பேசவைத்தன.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x