Published : 10 Oct 2022 06:08 AM
Last Updated : 10 Oct 2022 06:08 AM
கற்க கசடற கற்பவை கற்றபின் நிற்க அதற்குத் தக. துணைக்காலே இல்லா இக்குறள் கற்றவர்க்கு கல்வியே ஊன்றுகோல் ஆதலால் அவர் தனித்தே இயங்க முடியும் என்கிறது. இக்குறள் தன்னம்பிக்கையின் உச்சம். கற்க என்ற வள்ளுவர், பின் கசடறக் கற்க என்கிறார், கற்றபின் அதன்படி நிற்க என்கிறார், முடிவில் கற்றபடி நிற்பதே சிறப்பு என்றால் கசடறக் கற்க வேண்டியது மிகவும் அவசியம். ஆம் நாம் எதைக் கற்கிறோமோ அதுவே கல்வி. யாரிடம் கற்கிறோமோ அவரே ஆசான். கற்றலும் கற்பித்தலும் இரு கண்கள் போன்றவை. ஆம் ஆசிரியரிடத்து மாணவரும், மாணவரிடத்து ஆசிரியரும் கற்பது ஒன்றே வகுப்பறைச் சாதனை.
கற்றல் ஆசிரியர், மாணவர் இருவரிடத்தும் நிகழுமல்லவா? நல்ல ஆசிரியருக்கு பயிலும் மாணவர்களே சிறந்த புத்தகங்கள். அவர்களை உற்றுநோக்கும்போது ஆசிரியரிடம் கற்றல் நிகழும். கற்றுக் கொண்டேயிருக்கும் ஆசிரியரே உலகின் சிறந்த ஆசிரியர் என்பது உலகம் தழுவிய கருத்து.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
உங்களின் உறுதுணைக்கு நன்றி !
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT