Published : 24 Aug 2022 06:32 AM
Last Updated : 24 Aug 2022 06:32 AM

ப்ரீமியம்
கணித பாடத்தை எளிதாக்கியுள்ள எண்ணும் எழுத்தும் திட்டம்: சாதாரண பொருட்கள் கொண்டு அசாதாரண கல்வி கற்கும் குழந்தைகள்

கி.அமுதா செல்வி

ஆந்திராவின் எல்லைப் புறத்தில் இருக்கும் வேப்பனபள்ளி ஒன்றியத்தில் அமைந்துள்ள அரசு பள்ளியில் விளையாட்டு மூலமாக கணிதத்தின் அடிப்படை கருத்தை இவ்வளவு எளிமையாக கற்றுக் கொடுக்க முடியுமா என்று நான் முதலில் வியந்துதான் போனேன். கணித கருத்துகளை கற்றுக் கொடுப்பதால் நான் கணித ஆசிரியர் என்றோ அல்லது அனைத்து பாடங்களையும் கற்றுக் கொடுக்கும் வித்தகர்களான இடைநிலை ஆசிரியர் என்றோ நீங்கள் தவறாக என்னை கணிக்க வேண்டாம், நான் ஒரு சமூக அறிவியல் ஆசிரியை.

கணிதம் நமக்கு கைகூடாது என்று கலைப் பிரிவு எடுத்து படித்துஆசிரியரான நான் இன்று கணிதத் தின் மிக முக்கியமான அடிப்படை கருத்துகளை குழந்தைகளுக்கு கற்றுக் கொடுக்கும் மாதிரி வகுப்பறையின் ஆசிரியை என்பதுதான் வியப்பின் உச்சம். கற்றல் கற்பித்தல் உபகரணங்களை தயாரிக்க தேவையான பொருட்களை நகர்புறத்து ஆசிரியர்கள் எளிமையாக பெற்று கற்றல் உபகரணங்களை செய்து விடுவார்கள். அதுவே நீலகிரி அஞ்செட்டி போன்ற மலைப்பிரதேச ஆசிரியர்கள் கற்றல் உபகரணங்கள் செய்வதில் சில நடைமுறை சிக்கல்கள் இருப்பது மறுக்க முடியாத உண்மை.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x