Published : 03 Aug 2022 06:18 AM
Last Updated : 03 Aug 2022 06:18 AM

ஓசூர் | செஸ் போட்டியில் சாதனை படைத்து வரும் சகோதரிகள்

ஓசூர்: ஓசூர் ஒன்னல்வாடியைச் சேர்ந்த கிருஷ்ணன் - குணவதி தம்பதியின் மகள்கள்ஸ்ராவணி (14), சிவசாம்பவி (11). ஒன்னல் வாடி அரசு உயர் நிலைப் பள்ளியில் ஸ்ராவணி 9-ம் வகுப்பும், சிவசாம்பவி 6-ம் வகுப்பும் படிக்கின்றனர்.

செஸ் விளையாட்டில் ஆர்வமுள்ள இச்சகோதரிகள் தாலுகா மற்றும் மாவட்ட அளவில் நடைபெற்ற செஸ் போட்டிகளில் முதல் பரிசு உள்ளிட்ட பல வெற்றிகளை குவித்துள்ளனர்.

இதில், ஸ்ராவணி மொத்தம் 28 கோப்பைகள், 11 பதக்கங்கள், 1 கிரீடம் வென்றுள்ளார். மேலும், அண்மையில் நடைபெற்ற மாவட்ட அளவிலான போட்டியில் முதல் பரிசு வென்ற இவர், மாமல்லபுரத்தில் நடைபெற்ற 44-வது சர்வதேச செஸ் போட்டி தொடக்க விழா அணிவகுப்பில் பங்கேற்றார். சிவசாம்பவி, மாவட்ட அளவிலான போட்டியில் இரண்டாம் இடம் பெற்றுள்ளார். இவர், 26 கோப் பைகள், 9 பதக்கங்களை வென்றுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x