Last Updated : 19 Jan, 2024 05:10 AM

 

Published : 19 Jan 2024 05:10 AM
Last Updated : 19 Jan 2024 05:10 AM

ப்ரீமியம்
முத்தமிழறிஞர் மொழிபெயர்ப்புத் திட்டம் - ஐஏஎஸ், எம்பிபிஎஸ் வெல்ல அரிய மொழிபெயர்ப்பு புத்தகங்கள் @ சென்னை புத்தகக் காட்சி 2024

வாழ்க்கையின் அத்தனை அம்சங்களையும் ஈரடிகளில் அற்புதமாக எடுத்துச் சொல்லும் உலகப்பொது மறை திருக்குறள் உண்மையாகவே எப்போது உலகினால் கொண்டாடப்பட்டது தெரியுமா? தமிழில் இருந்து மற்ற மொழிகளுக்கு மொழிபெயர்க்கப்படத் தொடங்கியதிலிருந்துதான். அவ்வாறு இதுவரை 120-க்கும் அதிகமான மொழிகளில் அய்யன் வள்ளுவரின் குறள்கள் மொழிபெயர்க்கப்பட்டிருப்பதால் மொழி, மதம், இனம், தேச எல்லைகள் கடந்து அனைவராலும் போற்றப்படும் சமயசார்பற்ற இலக்கியமாக குமரி முனையில் வீற்றிருக்கும் வள்ளுவர் சிலை போல கம்பீரமாக உயர்ந்து நிற்கிறது.

தமிழர் அல்லாவதரும் குறள் அறிந்து பயனுறுவது போன்று இந்தியாவிலும் அயல் நாடுகளிலும் பல்வேறு மொழிகளில் வெளிவரும் சிறந்த படைப்புகளை தமிழர்கள் அறிந்திட வேண்டும். குறிப்பாக இன்றைய மாணவர்கள், உயர்கல்வி, போட்டித்தேர்வு, ஆராய்ச்சி படிப்பு, சமூக அறிவை வளர்த்தல் போன்றவற்றுடன் தொடர்புடைய நூல்களை ஆவலுடன் தேடி வருகின்றனர். அவர்களுக்கு தாய்மொழியில் இதுதொடர்பான நூல்கள் கிடைத்தால் ஒட்டுமொத்த தமிழ் சமூகத்தின் அடுத்தகட்ட பாய்ச்சலுக்கு அது மிகப்பெரிய உந்துசக்தியாக மாறும். இந்த உயரிய சிந்தனையின் வெளிப்பாடே தமிழகஅரசின் முத்தமிழறிஞர் மொழிபெயர்ப்புத் திட்டம். தமிழ்நாடு பாடநூல் கழகமும், கல்வியியல் கழகமும் இணைந்து இத்திட்டப் பணிகளை மேற்கொண்டு வருகின்றன.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x