Published : 31 Jan 2023 06:16 AM
Last Updated : 31 Jan 2023 06:16 AM

ப்ரீமியம்
மகத்தான மருத்துவர்கள் - 26: அனைவருக்கும் பார்வை, அனைவருக்கும் வெளிச்சம்!

அரசுப் பணியிலிருந்து பணி ஓய்வு பெற்ற டாக்டர் வி, அதற்குப் பின் புதியதொரு தொடக்கத்திற்கான விதையை விதைத்தார். 1976-ல் தனது பிரியமான அரவிந்தர் பெயரில் 11 படுக்கை வசதி கொண்ட அரவிந்த் கண் மருத்துவமனையை மதுரையில் தொடங்கினார் டாக்டர் வி. நான்கு உதவி மருத்துவர்களாக தனது சகோதர சகோதரிகளை நியமித்து, ஒரு சில செவிலியர்களுடன் அவர் தொடங்கிய அந்த மருத்துவமனையின் அன்றைய நோக்கம் கண் புரையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அறுவை சிகிச்சை மூலம் பார்வையை மீட்டுத் தருவதாகத்தான் இருந்தது.

பத்து நிமிட அறுவைசிகிச்சை, பிறகு பத்து நாட்கள் ஓய்வு. அவ்வளவுதான். அதனால் கண்பார்வையை இழக்க இருந்தஒருவர் வாழ்நாள் முழுதும் வெளிச்சம் பெறுகிறார் என்றால் அதை நாம் செய்யத்தானே வேண்டும்? என்று தன்னைத் தானே கேட்டுக் கொண்ட டாக்டர் வி, தனது வாழ்வின் ஒவ்வொரு நாளையும் அதற்காகவே செலவிட்டார். பணம் உள்ளவர்களுக்கு செய்யும் சிகிச்சையில் பெற்ற பணத்தை ஏழைகளுக்கு இலவசமாக செய்யத் தொடங்கினார். அப்படி எங்கோ ஒரு கிராமத்தில் விவசாயம் செய்து வந்த எண்ணற்ற வயோதிகர்களின் பார்வையை இலவசமாக மீட்டுத்தந்து, அவர்கள் வாழ்வாதாரத்தையும் மீட்டுத் தந்தார்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x