Last Updated : 20 Dec, 2022 06:18 AM

 

Published : 20 Dec 2022 06:18 AM
Last Updated : 20 Dec 2022 06:18 AM

ப்ரீமியம்
சின்னச் சின்ன மாற்றங்கள் - 22: தேர்வுக்குப் பிறகு சும்மா இருக்க கற்றுக் கொள்வோமா!?

சும்மா இருப்பதென்றால் சும்மா இருப்பதுதான். எந்த காரியமும் செய்யாமல் அமைதியாக அமர்ந்து இருப்பது. இதோ இன்னும் சில நாட்களில் அரையாண்டு தேர்வு விடுமுறை வந்துவிடும். எல்லோருக்கும் ஏகப்பட்ட திட்டங்கள் இருக்கும். நண்பர்கள் வீட்டிற்குச் சென்று விளையாடுதல், வீட்டை சுத்தப்படுத்தி அலங்கரித்தல், குடும்பத்தின் பொருளாதாரத்திற்கு உதவுதல், வீட்டில் பெற்றோர்களின் தினசரி வேலைகளில் உதவுதல் என நீண்ட பட்டியலை இந்நேரம் தயாரித்து இருப்பீர்கள். நீங்கள் தயாரிக்க முற்படவில்லை என்றாலும் பெற்றோர்களும், உறவினர்களும் நண்பர்களும் இந்நேரம் திட்டமிட்டு இருப்பார்கள்.

கரோனா காலகட்டத்தில் எங்கு பார்த்தாலும் ஆசிரியர்களும், பெற்றோர்களும் தங்கள் குழந்தைகளை ஏதாவது செயல்பாட்டில் ஈடுபட வைக்கவேண்டும். இந்த வகுப்பில் சேர்க்கலாமா அந்த வகுப்பில் சேர்க்கலாமா எனத் துடித்தனர். ஒரு புறம் இணைய வசதியே இல்லாத வீடுகளும் இருக்கவே செய்தன. எதையாச்சும் ஒன்றினை கற்றுக்கொண்டே இருக்க வேண்டும், இடைவெளியே விடாமல் செயல்பட வேண்டும், கிடைக்கும் வாய்ப்பை முழுமையாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்ற ஆவல்தான். அந்த ஆர்வத்தில் ஒரு குறை ஏது மில்லை. ஆனால், கொஞ்சம் அறிவியல்பூர்வமாக சிந்திக்கவும் வேண்டும் அல்லவா.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x