Published : 21 Nov 2022 06:25 AM
Last Updated : 21 Nov 2022 06:25 AM

ப்ரீமியம்
வாழ்ந்து பார்! - 18: அது வந்து... நான் என்ன சொல்றென்னா...

அரிஅரவேலன்

தகவல்தொடர்பில் உள்ள மொழிச் சிக்கலைப் புரிந்து கொண்டோம். அடுத்த சிக்கலைப் பற்றிக் கூறுகிறீர்களா என்று வேண்டினான் காதர். அடுத்தது உள்ளடக்கச் சிக்கல் என்றார் எழில். அதாவது எதைப் பற்றிப் பேசுகிறோம் என்பதா என்று வினவினாள் கயல்விழி. எதைப் பற்றி எப்படிப் பேசுகிறோம் என்பது என்ற எழில், எதைப் பற்றிப் பேசப் போகிறோம் என்பது நமக்கே தெளிவின்றி இருப்பதில் தொடங்குகிறது இச்சிக்கல் என்றார்.

அப்படியானால் தெளிவு பெறுவதற்காகக் கூட பேசக் கூடாதா என்று வினவினான் சாமுவேல். தகவல் தொடர்பின் நோக்கம் தனது எண்ணத்தைத் தெரிவிப்பது மட்டுமன்று; தனக்குக் குழப்பமாக உள்ளவற்றை பற்றி உரியவரிடம் கேட்டுத் தெளிவு பெறுவதும், தெரியாதனவற்றைக் கேட்டு அறிவதும் தேவையான அறிவுரைகளைக் கோருவதும் கூட தகவல்தொடர்பின் நோக்கங்களே. எனவே, தெளிவு பெறவும் பேசலாம்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x