Published : 09 Nov 2022 06:20 AM
Last Updated : 09 Nov 2022 06:20 AM

ப்ரீமியம்
கையருகே கிரீடம் - 17: பிளஸ் 2 முடித்ததும் கடற்படை அதிகாரி ஆகலாம்!

ராணுவ விஞ்ஞானி வி.டில்லிபாபு

பளிச்சென வெண்ணிற சீருடையில் மிடுக்காக போர்க்கப்பலில் பயணிக்கும் இந்திய கடற்படை அதிகாரிகளை ஊடகங்களில் பார்த்திருக்கலாம். ஆழ்கடலில் மிதக்கும் விமானம் தாங்கிக் கப்பல்கள், ஆயுதம் சுமந்த போர்க்கப்பல்கள், கடலடியில் தேசம் காக்கும் நீர்மூழ்கிகள் எனப் பல தளங்களில் களமாடும் கடற்படையில் நீங்களும் அதிகாரி ஆகலாம். கடற்படை அதிகாரி ஆவது எப்படி? பட்டப்படிப்பு, பட்ட மேற்படிப்பு படித்தவர்கள் மட்டுமின்றி பிளஸ்2 படித்தவர்களும் இந்திய கடற்படையில் அதிகாரி ஆகலாம். அதற்கு என்னென்ன வழிகள் உள்ளன.

1. என்டிஏ நுழைவுத் தேர்வு: ஒன்றிய பணியாளர் தேர்வாணையம் (யூபிஎஸ்சி), தேசிய பாதுகாப்புப் பயிற்சிப்பள்ளியில் (National Defence Academy -NDA) சேருவதற்கான என்டிஏ நுழைவுத் தேர்வை நடத்துகிறது. இந்தத் தேர்வு, ராணுவம், கடற்படை, விமானப்படைகளில் அதிகாரியாக சேருவதற்கான பொதுவான நுழைவுத் தேர்வு என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நுழைவுத் தேர்வின் மூலம் கடற்படை உள்ளிட்ட பாதுகாப்புப்படைகளில் விமானியாகவும் பணியாற்ற வாய்ப்பு உண்டு.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x