Published : 08 Nov 2022 06:12 AM
Last Updated : 08 Nov 2022 06:12 AM

ப்ரீமியம்
சிறுகதை: ஜானி என்ற பல்லி

ஊருக்கு வெளியே சில பாறைகளுக்கு நடுவில் ஜானி என்றொரு பல்லி வாழ்ந்தது. மற்ற பல்லிகளைப் போலவே சமதளமான பாறையில் படுத்து அமைதியாக சூரியக் குளியல் போடுவது ஜானிக்கு பிடிக்கும். அவ்வாறு செய்யும்போது களைப்பெல்லாம் போனதுபோல உணரும், ஒன்றுக்கு மேற்பட்ட தடவை அப்படியே தூங்கியதும் உண்டு. ஜானி தன் வாலை இழந்தபோது சரியாக அதுதான் நடந்தது: தூங்கிக் கொண்டிருந்த ஜானியை குழந்தைகள் சிலர் பிடித்தார்கள், வாலை விட்டுவிட்டு தப்பித்து ஓடி மறைவது மட்டுமே அதற்கு இருந்த ஒரே வழி.

உடலில் ஒட்டி இல்லாவிட்டாலும், தொடர்ந்து துடித்துக் கொண்டிருந்த வாலைப் பார்த்து எப்படி குழந்தைகள் சத்தமாக சிரித்தார்கள் என்பதை அதிர்ச்சியோடும் பயத்தோடும் ஜானி கவனித்தது. சிறிது நேரம் கழித்து அவர்கள் வாலை தூக்கி எறிந்தார்கள். குழந்தைகள் அங்கிருந்து சென்ற பிறகு, ஜானி தன் வாலை எல்லா பக்கமும் தேடியது. சரியான இடத்தில் அதை மறுபடியும் ஒட்டி வைக்க நினைத்தது.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x