Published : 08 Nov 2022 06:19 AM
Last Updated : 08 Nov 2022 06:19 AM
தோல்விகளால் சிறிதும் துவளாத டாக்டர் சுப்பாராவ், 1942-ம் ஆண்டு லெடர்லே ஆய்வகத்தில், குறைந்த சம்பளத்துடன் தலைமை மருத்துவராகப் பொறுப்பேற்றார். தனது தலைமையில் திறமையான இளைஞர் குழுவை உருவாக்கத் தொடங்கினார். அவரையும் அவர் குழுவினரையும் ‘ஃபோலிக் ஆசிட் பாய்ஸ்' (folic acid boys) என இன்றும் மருத்துவ உலகம் பெருமையுடன் அழைக்கிறது. தனது குழுவின் உதவியுடன் அடுத்த பத்து ஆண்டுகளுக்குள் உலக மனிதர்களை எல்லாம் காக்கும் பல அருமருந்துகளை மருத்துவ உலகிற்கு வழங்கினார் டாக்டர் சுப்பாராவ்.
இன்று நாம் பயன்படுத்தும் டெட்ரா-சைக்ளின் ஆண்டிபயாடிக்கின் முன்னோடியான ஆரியோமைசினை முதலில் டாக்டர்சுப்பாராவ் தான் கண்டறிந்தார். போர்முனையில் உயிர்காக்கும் மருந்தாக இருந்த பென்சிலின் மற்றும் ஸ்ட்ரெப்டோமைசினுக்கு ஈடாக அமைந்தது டெட்ரா-சைக்ளின்கள் என்பது பிந்தைய வரலாறு. டாக்டர் சுப்பாராவ் அன்று தொடங்கி வைத்த டெட்ரா-சைக்ளின்களின் பயணம்தான் இன்று சமீபத்திய டாக்சி-சைக்கிளினைத் தந்து, டெங்கு காய்ச்சலை நம்மிடையே கட்டுக்குள் வைத்திருக்க உதவுகிறது என்பதை நாம் என்றும் மறக்கக் கூடாது.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
உங்களின் உறுதுணைக்கு நன்றி !
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT