Published : 02 Nov 2022 06:17 AM
Last Updated : 02 Nov 2022 06:17 AM

ப்ரீமியம்
சைபர் புத்தர் சொல்கிறேன் - 16: கொஞ்சம் கொஞ்சமாகத் திருடும் ஆன்லைன் மோசடி

எழுத்தாளர் சுஜாதா ‘அந்நியன்’ படத்தில், ஐந்து பைசா திருடினா தப்பா? - இல்லை. அஞ்சு லட்சம் பேரிடம் அஞ்சு பைசாவா திருடினா? - தப்பு என்று ஒரு வசனம் எழுதியிருப்பார். ஆன்லைன் மோசடிகளில் ஒரு முக்கிய தந்திரம் மிகச் சிறிய அளவிலான பணத்தைத் திருடுவது. அதனால் பணம் ஏமாந்தவர்கள் சின்ன பணம்தானே என அடுத்த வேலைக்குச் சென்றுவிடுவார்கள். 10 ரூபாய் தான் ஆனால் அதுவே ஒரு லட்சம் பேரை ஏமாற்றினால் பத்து லட்சம் ரூபாய் ஆகிவிடும்.

டேட்டா என்ட்ரி மோசடி: ஆன்லைன் வேலைகளில் ஒரு வித மோசடி நடக்கும். எளிதில் செய்யக் கூடிய டேட்டா என்ட்ரி வேலைகள் ஆன்லைனில் கொட்டிக் கிடக்கின்றன. ஆவணங்களைத் தட்டச்சு செய்து மின் கோப்புகளாக மாற்ற வேண்டும். இதற்கு வார்த்தைக்கு இவ்வளவு பணம் அல்லது ஒரு மணி நேரத்திற்கு இவ்வளவு பணம் என்று கொடுப்பார்கள். ஒரு நிறுவனம் சுமார் ஆயிரம் வார்த்தைகளைத் தட்டச்சு செய்து மின் கோப்பாக மாற்ற 100 ரூபாய் தருவதாக வைத்துக் கொள்ளுங்கள். அந்நிறுவனத்திடம் பல லட்சம் வார்த்தைகளை கொண்ட கோப்புகள் இருக்கும் அதை மாற்றப் பல ஆயிரம் செலவாகும். இந்நிலையில் அந்நிறுவனம் ஆன்லைனில் வலை வீசி, உங்களின் பொன்னான நேரத்தில் தினமும் 200 அல்லது 500 ரூபாய் வரை வேலை செய்யச் சொல்லுவார்கள். முன்பணம் ஏதும் நீங்களும் கொடுக்க வேண்டாம் அவர்களும் கொடுக்க மாட்டார்கள். ஐந்தாயிரம் ரூபாய்க்கான வேலைவரை நீங்கள் செய்த பிறகு நச்சரிக்கத் தொடங்கியதும் அவர்கள் உங்களை நீக்கிவிடுவார்கள். பணமும் கிடைக்காது. இப்படி ஒரு 50 பேரை ஏமாற்றினால் அவர்கள் வேலை முடிந்தது பல ஆயிரம் லாபம். யார் போய் இவர்கள் மேல் காவல்துறையில் புகார் கொடுக்கப் போகிறார்கள்? நீங்கள் ஆன்லைனில் ரிப்போர்ட் செய்தாலும் ஒன்றும் செய்ய முடியாது.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x