Published : 31 Oct 2022 06:20 AM
Last Updated : 31 Oct 2022 06:20 AM
உறவுக்கும் தகவல் தொடர்புக்கும் என்ன தொடர்பு என்று வினவினாள் தங்கம். உறவு என்பதே ஆட்களுக்கு இடையே நிலவும் தொடர்புதானே என்றான் காதர். ஆம். தகவல் தொடர்புதான் எல்லா உறவுக்கும் அடிப்படை. தகவல்தொடர்பு சீராக இருந்தால், உறவு சிறப்பாக இருக்கும் என்றார் ஆசிரியர் எழில். தகவல்தொடர்பு என்றால் என்ன என்று வினவினான் தேவநேயன். ஒருவர் தனது எண்ணத்தை ஒலி, பேச்சு, எழுத்து, ஓவியம், உடலசைவு, அமைதி ஆகியவற்றின் வழியாகப் பிறருக்குத் தெரிவிக்கிறார். அவர் தெரிவிப்பதைக் கேட்கும், பார்க்கும், படிக்கும் பிறர் அவரது எண்ணத்தைப் புரிந்து கொள்கின்றனர். அதைத்தான் தகவல்தொடர்பு என்கிறோம் என்று விளக்கினார் எழில். ஒருவேளை அவர் தெரிவிக்க நினைத்ததைப் பிறர் தவறாகப் புரிந்து கொண்டால் என்று வினவினான் சாமுவேல். அது மோசமான தகவல் தொடர்பு என்றாள் பாத்திமா. சரியாகப் புரிந்து கொண்டால் என்று வினவினாள் கயல்விழி. சீர்மிகு தகவல்தொடர்பு என்றார் எழில்.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
உங்களின் உறுதுணைக்கு நன்றி !
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT