Published : 31 Oct 2022 06:22 AM
Last Updated : 31 Oct 2022 06:22 AM
பொறியியல் கலந்தாய்வுக்கு விண்ணப்பித்திருந்த மாணவ மாணவியரில் கணிசமானோர் பேராசிரியர் ராகவனை சூழ்ந்திருந்தனர். அவர்களிடம் தீவிரமாக உரையாடிக் கொண்டிருந்த பேராசிரியர் ராகவன், அரங்கில் மாணவ மாணவியர் நிறைந்ததும் அவர்கள் பக்கம் பேச்சை திருப்பினார்.
நமது பள்ளியின் முன்னாள் மாணவ மாணவியரான இவர்களை நன்கு அறிவீர்கள். இவர்கள் அனைவரும் பொறியியல் படிப்புக்கான கலந்தாய்வுக்கு விண்ணப்பித்தவர்கள். 4 சுற்றுகளாக நடைபெறும் பொறியியல் கலந்தாய்வில் இவர்கள் நான்காம் சுற்றில் பங்கு பெற இருக்கிறார்கள். அது தொடர்பான சில ஆலோசனைகளை பெறுவதற்காக இங்கே வந்திருக்கிறார்கள். இதையொட்டி தற்போதைய பள்ளி மாணவர்களுக்கும் சொல்ல சில விஷயங்கள் இருக்கின்றன. அவற்றைத்தான் இன்று பார்க்க இருக்கிறோம் என்றபடி பேராசிரியர் இடைவெளி விட்டார். இன்று பீடிகை பலமாக இருக்கிறதே என்றபடி மாணவர்களும் நிமிர்ந்து அமர்ந்தனர்.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
உங்களின் உறுதுணைக்கு நன்றி !
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT