Published : 18 Oct 2022 06:14 AM
Last Updated : 18 Oct 2022 06:14 AM

ப்ரீமியம்
மகத்தான மருத்துவர்கள் - 14: காலராவை ஒழிக்க போராடிய டாக்டர் சாம்புநாத் டே

டாக்டர் சசித்ரா தாமோதரன்

இங்கிலாந்தில் முனைவர் பட்டம் பெற்றதுடன் நாடு திரும்பிய டாக்டர் சாம்புநாத் டேயை இந்தியாவில் பரவிவந்த காலராதான் வரவேற்றது. 18 மற்றும் 19-ம் நூற்றாண்டில் ப்ளேக் நோய் உலகெங்கும் லட்சக்கணக்கான மக்களை (black death) ஒருபக்கம் பலியெடுத்துக் கொண்டிருந்தபோது, சுகாதாரமற்ற உணவு மற்றும் நீரின் மூலம் பரவிய காலரா நோய் (blue plague) மறுபக்கம் மக்களை வாட்டி வதைக்க ஆரம்பித்திருந்தது. இந்தியாவிலும் அதீத வயிற்றுப்போக்கின் மூலம் பல்லாயிரக்கணக்கான உயிர்களை வேட்டையாடத் தொடங்கியது காலரா.

காலராவால் பாதிக்கப்பட்டவர்கள் சிகிச்சை ஏதுமின்றி கொத்து கொத்தாக மடிவதைக் கண்ட டாக்டர் சாம்புநாத் டே, தனது கவனம் முழுவதையும் காலரா நோக்கி திருப்பினார். தான் பணிபுரிந்த நீல்ரத்தன் சர்கார் மருத்துவக் கல்லூரியின் சிறியதொரு ஆய்வகத்தில் இரவும் பகலும் அயராது உழைத்து, ‘rabbit intestinal loop model' கோட்பாட்டை இயற்றினார். காலரா கிருமிகள் ரத்தத்தில் விஷம் போலப் பரவி பாதிப்புகளை ஏற்படுத்துகிறது என்று அதுவரை நம்பப்பட்ட, நுண்ணுயிரியல் துறையின் தந்தையான ராபர்ட் காக்கின் முடிவுகளை மறுத்தார் சாம்புநாத். விப்ரியோ காலரே பாக்டீரியாவின் எண்ட்ரோ-டாக்சின் வகை நஞ்சுகள் ரத்தத்தில் பரவாமல், குடலிலிருந்து மட்டுமே செயல்படுகிறது என்ற தனது ஆராய்ச்சி முடிவை 1953-ல் தீர்க்கமாக முன்வைத்தார்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x