Published : 13 Oct 2022 06:18 AM
Last Updated : 13 Oct 2022 06:18 AM
ஞானி வயல் வழியே செல்லும் போது, பாட்டி ஒருவர் கொளுத்தும் வெயிலில் மகிழ்ச்சியோடு வேலை செய்து கொண்டிருந்தார். அதனை பார்த்த ஞானி, இவ்வளவு மகிழ்ச்சியாக வேலை செய்றீங்க, உங்களுக்கு ஒருநாள் கூலி எவ்வளவு கிடைக்கும் என கேட்டார். 80 ரூபாய் என்றார் பாட்டி. இவ்வளவு குறைந்த கூலியா, இதை வைத்துக்கொண்டு, எப்படி மகிழ்ச்சியாக இருக்கிறீர்கள் என ஞானி வினவினார்.
80 ரூபாயை நான்காக பிரித்து முதல் 20 ரூபாய் குடும்ப செலவுக்கு, அடுத்த 20 ரூபாய் கடனுக்கு, 3வது 20 ரூபாய் தர்மத்துக்கு, 4வது 20 ரூபாய் முதலீட்டுக்கு என்றார் பாட்டி. வியப்பின் உச்சிக்கே போன ஞானி, 80 ரூபாயில் எப்படி இவ்வளவும் செய்கிறீர்கள் என கேட்டார். எனக்கும் கணவருக்கும் நாளொன்றுக்கு 20 ரூபாய் செலவாகிறது. அது என் குடும்பச் செலவு. இளமையில் என்னை காப்பாற்றிய தாய், தந்தைக்கு 20 ரூபாய் செலவாகிறது. அது என் பழைய கடன். ஆதரவற்றோர் இல்லத்துக்கு 20 ரூபாய் தருகிறேன். அது தர்மம். என்னுடைய மகள் வழி பேத்தியின் கல்விக்கு 20 ரூபாய் செலவிடுகிறேன். அது முதலீடு. பிற்காலத்தில் என்னை அவர்கள் காப்பாற்றுவார்கள் என்றார் பாட்டி.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
உங்களின் உறுதுணைக்கு நன்றி !
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT