Published : 29 Sep 2022 06:15 AM
Last Updated : 29 Sep 2022 06:15 AM
“தலையில சீப்பை வெச்சாலே போதும்... கொத்துகொத்தா இவளுக்கு முடி கொட்டுது. இவ்வளவு சின்ன வயசுலயே இப்படி கொட்டினா பயமா இருக்கு. முடி கொட்டாம இருக்க எதும் வழி இருக்கா டாக்டர்?" என்று கேட்கிறார் பத்தாம் வகுப்பு காவ்யாவின் அம்மா. முடிகொட்டுவது பெரிய பிரச்சினைதானா என்பதை முதலில் புரிந்து கொண்டால் அதை எப்படி கையாளலாம் என்பதையும் தெரிந்து கொள்வது எளிது காவ்யா அம்மா.
நமது தோல் மூன்று அடுக்குகளால் ஆனது. அதில் இரண்டாம் அடுக்கான டெர்மிஸ் எனும் உட்பகுதியில்தான் வியர்வை நாளங்கள், எண்ணெய் சுரப்பிகள் மற்றும் முடியின் வேர்க்கால்கள் அமைந்துள்ளன. கெரடின் எனும் கடினமான புரதத்தால் ஆன நமது முடி, இந்த வேர்க்கால்களில் இருந்து புறப்பட்டு டெர்மிஸைத் துளைத்து தோலுக்கு வெளியே வரும்போதுதான் அது நமது கண்ணுக்குத் தெரிகிறது. அதேசமயம், நமது தலைமுடியின் வேர்கால்களில் உள்ள மெலனின் நிறமி மனிதர்களிடையே வேறுபடுவதால், அதன் அளவைப் பொறுத்து தலைமுடி சிலருக்கு நல்ல கருப்பாகவும், சிலருக்கு செம்பட்டை அல்லது பொன்னிறத்திலும் இருக்கிறது. மிக வேகமாக வளரும் திசுக்களில் ஒன்றான முடி, ஒவ்வொரு நாளும் 0.35 – 0.44mm அளவிற்கு வளரும் என்பதுடன், அதில் நரம்புகள் இருக்காது என்பதால்தான் அதை வெட்டும்போது நமக்கு வலிப்பதில்லை.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
உங்களின் உறுதுணைக்கு நன்றி !
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT