Last Updated : 14 Dec, 2023 04:29 AM

 

Published : 14 Dec 2023 04:29 AM
Last Updated : 14 Dec 2023 04:29 AM

ப்ரீமியம்
இவரை தெரியுமா? - 24: கற்களுக்கு உயிர் ஊட்டிய மைக்கலாஞ்சலோ

ப்ளோரன்ஸ் மாகாண அரண்மனைத் தோட்டத்தில் இருந்த பழமையான ரோம் நாட்டு சிற்பங்களை அச்சிறுவன் ரசித்துக் கொண்டிருந்தான். அங்கிருந்த ஃபான் (Faun) முகமூடிச் சிற்பம் அவனைக் கவர்ந்தது. ஆட்டின் உடலும் மனிதத் தலையும் கலந்த கலவையாகக் காட்சியளிக்கும் ஃபான், ரோமத் தொன்மத்தில் வரும் மாய விலங்கு. அதைப் பார்த்த சிறுவன் என்ன நினைத்தானோ, தீடீரென அதன் பற்களை வெட்ட முயன்றான். பின்னால் சத்தம் கேட்க, திரும்பிப் பார்த்தான். அவனருகில் ப்ளோரன்ஸ் நாட்டு மன்னர் லோரன்ஸொ நின்றுகொண்டிருந்தார்.

சிற்பத்தை என்ன செய்கிறாய் என்று அவர் அதட்ட, “இந்த ஃபானுக்கு வயதானமுகத்தோற்றம் இருக்கிறது. ஆனால், இதன் பற்கள் இளமையைப் பிரதிபலிக்கும் வண்ணம் பொலிவாக உள்ளன. அதனால்தான் இதன் பற்களை வெட்டுகிறேன்” என்றான் அச்சிறுவன். மன்னர் அசந்துபோனார். இச்சம்பவம் நடந்தபோது வெறும் 14 வயது பாலகன் அவன். இந்த வயதில்இத்தனை முதிர்ச்சியா என்று ஆச்சரியப்பட்டார். மைக்கலாஞ்சலோ எனும் பெயர்,பிற்காலத்தில் புகழ்பெற்ற சிற்பியாகவும் ஓவியராகவும் கவிஞராகவும் நினைவுகூரப்படும் என ஊகித்து அச்சிறுவனை அரண்மனையில் வைத்துக் கொள்ள முடிவுசெய்தார் மன்னர். மைக்கல் வாழ்க்கை அந்நொடிமுதல் புதிதாகச் செதுக்கப்பட்டது.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x