Published : 01 Dec 2023 04:29 AM
Last Updated : 01 Dec 2023 04:29 AM

ப்ரீமியம்
மாறட்டும் கல்விமுறை - 23: மாணவரின் இதழோரம் கேலிப்புன்னகை எதனால்?

இயல்பான வாழ்க்கைக்கும், பள்ளிக்கூட வாழ்க்கைக்கும் இடையே இருக்கும் இடைவெளி பல நேரம் குழந்தைகளிடம் பெரும் குழப்பத்தை ஏற்படுத்துகிறது. இது கல்வியின் மீதும் ஏன் தன் மீதுமே நம்பிக்கையின்மையை ஏற்படுத்திவிடுகிறது. அத்தகைய சூழல்கள் எவையெவை? அச்சூழல்கள் மாணவர்களிடம் ஏற்படுத்தும் தாக்கங்கள் என்னென்ன? பார்ப்போம். பள்ளிக்கு வெளியே நன்றாகப் பேசக்கூடியவர். விளையாடக்கூடியவர். நன்றாகப் பழகுபவர். ஆனால், வகுப்பில் ஆசிரியர்கள் கேட்கும் கேள்விகளுக்கு எதற்கும் பதில் அளிக்க மாட்டார். ஆசிரியர்கள் பலர் விசாரித்தும் பலனில்லை.

தெரிந்து கொண்டே கேட்டால்? - பெற்றோர்களாலும் காரணத்தைக் கண்டுபிடிக்க முடியவில்லை. பிறகு உளவியல் வல்லுநரிடம் சென்றோம். அவர் சிரித்துக்கொண்டே பிரச்சினை யாருக்கு என்பதுதான் பிரச்சினையே என்றார். மேலும் எங்களிடம் நீங்கள் எப்போது கேள்வி கேட்பீர்கள்? என்று கேட்டார். தெரியாததைப் பற்றி தெரிந்துகொள்ள வேண்டும் என நினைத்தால் கேள்வி கேட்போம் என்றேன். மிகச் சரி. அப்படியானால் தெரிந்துவைத்துக் கொண்டே கேட்டால் யாராவது பதில் சொல்வார்களா? என்று உடல் குலுங்கச் சிரித்தார். ஆசிரியர்கள் பதில் தெரிந்து வைத்துக்கொண்டே கேட்கிறார். எதற்கு நான் பதில் சொல்ல வேண்டும் அந்த மாணவன் முடிவு செய்து விட்டார். அதனால் அவர் வகுப்பில் மௌனமாக இருக்கத் தொடங்கிவிட்டார்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x