Last Updated : 23 Nov, 2023 04:29 AM

 

Published : 23 Nov 2023 04:29 AM
Last Updated : 23 Nov 2023 04:29 AM

ப்ரீமியம்
இவரை தெரியுமா? - 21: அறிவியல் புனைகதைகளின் பிதாமகன் ஜூல்ஸ் வேர்ண்

‘கடலுக்கடியில் இருபதாயிரம் லீக்’ என்ற நாவலில் மின்சாரத்தில் இயங்கும் நீர்மூழ்கிக் கப்பல் பற்றி ஜூல்ஸ் வேர்ண் விவரித்திருப்பார். அக்கப்பலுக்குள் பழம் பொருட்கள் கொண்ட அருங்காட்சியகம், அரிய ஓவியங்கள், 12,000 புத்தகங்கள் கொண்ட நெடிய நூலகம், மின்விளக்கு வசதி கொண்ட அறைகள் எனப் பல சமாச்சாரங்கள் வைத்திருப்பார். இந்நாவலை எழுதி முடிப்பதற்கு மூன்று ஆண்டுகள் எடுத்துக் கொண்டார். எதிர்பார்த்தபடியே பெரும் வெற்றி பெற்றதால், அப்பணத்தை வைத்து தனக்கென்று ஒரு பெரிய கப்பல் கட்டினார். இத்தனைக்கும் அவர் காலத்தில் நீர்மூழ்கிக் கப்பல்களே கிடையாது.

ஜூல்ஸ் வேர்ணின் தீர்க்கதரிசனம்: ‘பூமியில் இருந்து நிலவுக்கு’ என்ற நாவலில் பல தீர்க்கதரிசனங்கள் வெளிப்பட்டன. 1865இல் வெளியான இந்நாவலை வைத்து,1960களில் விண்வெளி பயணம் மேற்கொண்ட அமெரிக்காவை நாம் இங்கு ஒப்புமைப்படுத்திப் பார்ப்போம். நாவலில் ஃப்ளோரிடா மாகாணத்தில் இருந்து விண்கலம் ஏவப்படுதாய் சொல்லியிருப்பார். நிஜத்திலும் அப்பல்லோ விண்கலம் அந்நகரத்துக்கு மிக அருகிலிருந்துதான் ஏவப்பட்டது. கதைப்படி முதலில் விலங்குகளை நிலவுக்கு அனுப்புவார்கள். நிஜத்திலும் குரங்கு மற்றும் நாய்களைத்தான் நாசா நிறுவனம் அனுப்பிவைத்தது. கதையிலும் நிஜத்திலும், விண்வெளிக்குச் சென்று திரும்புகையில் பாராசூட் அணிந்தவர்கள் கடலில் குதித்தே கரையொதுங்கினார்கள்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x