Published : 21 Nov 2023 04:29 AM
Last Updated : 21 Nov 2023 04:29 AM

ப்ரீமியம்
மகத்தான மருத்துவர்கள் - 50: குழந்தை நல மருத்துவத்தின் முன்னுதாரணம் ‘தி எக்மோர் மாடல்’

இந்தியாவின் குழந்தைகள் நல மருத்துவத்தின் தந்தை டாக்டர் ஜார்ஜ் கொஹிலோ குறித்து கடந்த வாரம் தெரிந்து கொண்டோம். குழந்தைகள் நல மருத்துவத்தின் தந்தை தொடங்கி வைத்ததை வழிநடத்திச் சென்ற பெருமை அடுத்து வந்த இரு மருத்துவர்களைச் சாரும். ஒருவர் டாக்டர் எஸ். டி. ஆச்சார். மற்றொருவர் டாக்டர் கே.சி. சௌத்ரி. தமிழகத்தில் இன்றளவும் குழந்தைகள் நலன் என்றால் எழும்பூர் (எக்மோர் ஆஸ்பத் திரி) என்பது எழுதப்படாத விதி எனலாம்.

"தி எக்மோர் மாடல்" எனப்படும் அனைத்து தரப்பு குழந்தைகளுக்கான தரமான குழந்தைகள் நல சிகிச்சையை வழங்கும் செயல் திட்டத்தைத் தொடங்கியவர் தான் டாக்டர் எஸ். டி. ஆச்சார். 'The Institute of Child Health' எனும் எழும்பூரின் குழந்தைகள் நல மருத்துவமனையின் பேராசிரியராகப் பணியாற்றிய அவர், குழந்தைகளுக்கான தடுப்பூசிகள், நோய்த்தொற்று தடுப்பு, ஊட்டச்சத்துக் குறைபாடு உள்ளிட்ட பற்பல திட்டங்களுக்கும் மாநில அரசுடன் இணைந்து செயலாற்றியுள்ளார். அடுத்ததலைமுறையினர் ஆற்றலுடன் விளங்க வேண்டும் என்று நூற்றுக்கணக்கான குழந்தைகள் நல மருத்துவர்களை உருவாக்கிய இவரது பெயரில் இன்றும், "டாக்டர் எஸ். டி. ஆச்சார் விருது" சிறந்த மருத்துவ மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x