Last Updated : 20 Nov, 2023 04:13 AM

 

Published : 20 Nov 2023 04:13 AM
Last Updated : 20 Nov 2023 04:13 AM

ப்ரீமியம்
கதை கேளு கதை கேளு 49: சூரியனை ஒளித்து வைத்த சிறுமி

கொ.மா.கோ. இளங்கோ நூற்றுக்கும் மேலான கதைப்புத்தகங்களை குழந்தைகளுக்காக எழுதியுள்ளார். 'சூரியனை ஒளித்து வைத்த சிறுமி' புத்தகம் அறிவியல் செய்திகளையும், ஏராளமான கற்பனைச் சம்பவங்களையும் உள்ளடக்கிய புனைகதைகளை கொண்டது. அதீபா பெற்ற திகில் அனுபவம், ஆழ்கடலில் ஓர் அதிசயம், தேன்சிட்டு தேடிய பதில் போன்ற கதைகள் குழந்தைகளுக்கு அறிவியலில் விருப்பம் கொள்ள வைக்கும் கதைகளாக உள்ளன.

அறிவியல் தகவல்கள்: பாலைவனத்தில் மணற்குன்று இயற்கையாக உருவாகாது. கோடைகாலத்தில் வீசும் புழுதிப்புயல், ஓர் இடத்திலிருக்கும் மணற்குன்றைக் கடத்தி வேறொரு இடத்தில் குவித்துவிடும் என்பதையும், பாலைவனத்தில் மணற்பிரதேசத்தில் வேகமான காற்றுக்கு மணல் நகரும்போது புலி உறுமுவதைப் போல சத்தம்வருமென்பதையும், மணல் ஆறு பாலைவனத்தில் உருவாக வாய்ப்பில்லை, பாலைவனத்திலும் சில நேரங்களில் ஆலங்கட்டி மழை பெய்யும், மணற்குன்றுகளின் மேலே உள்ள மணலுடன் கலக்கும் ஆலங்கட்டி கலவை கீழே வழிந்து ஓடும். அது பார்க்க மணல் ஆறு போல இருக்கும். உண்மையில் மணல் ஆறு இல்லை என்ற தகவல்களை அதீபாக்கு கூறுவது போல வரும் கதையின் அறிவியல் தகவல்கள் புதிய செய்திகளாக ஆச்சரியப்பட வைக்கின்றன.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x