Published : 16 Nov 2023 04:29 AM
Last Updated : 16 Nov 2023 04:29 AM
‘இடிமுழக்கம் மட்டும் இல்லையென்றால், மின்னல் வெட்டு மிகச் சாதாரணமாகப் போயிருக்கும்’ என்று கேப்டன் நீமோ சொல்வதாக ஜூல்ஸ் எழுதினார். உண்மையிலேயே ஜூல்ஸ் வேர்ண் மட்டும் இல்லையென்றால், புனைவு இலக்கிய வெளியில் காரசாரமற்ற கற்பனை வறட்சியான கதைகள் மட்டுமே எஞ்சியிருக்கும். 19ஆம் நூற்றாண்டில் அறிவியல் புனைகதைகளின் மன்னனாகத் திகழ்ந்து, உலகளவில் பெரும் அலை உருவாக்கிய சாகசக்காரர் ஜூல்ஸ் வேர்ணின் மாய உலகத்திற்குச் சென்றிருக்கிறீர்களா? கி.பி.1828ஆம் ஆண்டு, பிரான்ஸ் நாட்டிலுள்ள நாந்து எனும் ஓர் அழகிய தீவில் ஜூல்ஸ் பிறந்தார்.
கடற்கரையோரம் சரக்கு சுமந்து வரும் கப்பல்களை வீட்டிலிருந்து வேடிக்கைப் பார்த்தே வளரத் தொடங்கினார். ஜூல்ஸ் கடல்மேல் கொண்ட காதல், தொட்டிலில் இருந்து தொடங்கியது. பிற்பாடு இறுதிமூச்சுவரை கடல் பயணம் மேற்கொள்வதை வாழ்வின் அங்கமாகக் கடைப்பிடித்தார். 1846ஆம் ஆண்டு பள்ளிப் படிப்பை முடித்த கையோடு, தன் தம்பி பவுலுடன் சேர்ந்து கப்பல் கம்பெனியில் பணியாற்ற வேண்டுமென விரும்பினார். ஆனால், அதற்கு அவர் தந்தை பெர்ரி ஒத்துழைக்கவில்லை. தன் மகனும் தன்னைப் போல் ஒரு சட்ட மேதையாக வேண்டும் என விரும்பி, பாரீஸ் அனுப்பி வைத்தார்.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
உங்களின் உறுதுணைக்கு நன்றி !
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT