Last Updated : 16 Oct, 2023 04:31 AM

 

Published : 16 Oct 2023 04:31 AM
Last Updated : 16 Oct 2023 04:31 AM

ப்ரீமியம்
கழுகுக் கோட்டை 16: சகோதர சூழ்ச்சியோ செப்படி வித்தையோ

திருச்சேந்தி சொன்ன வார்த்தையைக் கேட்ட அடுத்தக் கணமே திடுக்கிட்டுப் போனார் திருவிடங்கன். ‘அடப்பாவி, நமது குலமே மன்னர் குடியைக் காப்பதற்கென்றே பிறவியெடுத்தது. அப்படிப்பட்ட இந்தக் குடியிலேயே பிறந்து, குலத்தைக் கெடுக்கும் கோடரிக்காம்பாக ஆகிவிட்டாயே? இனி ஒருக்கணமும் நீ இந்த நாட்டில் இருக்கக் கூடாது. அப்படி இருந்தால் உனது உயிர் உன்னுடையது அல்ல. எத்தனையோ உயிர்களைப் பலியெடுத்த எனது வாளுக்கு தந்தை தனயன் என்கிற உறவெல்லாம் தெரியாது’ என்றார்.

மேலும் தொடர்ந்த அவர், ‘உனது நஞ்சு நிறைந்த நெஞ்சில் எனது வாள் விரைவாகப் பாய்ந்து உனது உயிரைப் போக்கிவிடும். ஒரு தந்தையாக உனக்கு நான் கொடுக்கும் கடைசி வாய்ப்பு. புத்தியிருந்தால், உயிரைக் காப்பாற்றிக் கொண்டு இந்த நாட்டை விட்டு ஓடித் தொலைந்து போ. இனி என் முகத்தில் சாகும் வரை நீ விழிக்கக் கூடாது’ என்று கொந்தளித்தார். திருச்சேந்திதான் நிலைமையின் தீவிரத்தை உணர்ந்து திருத்தோன்றியை அவ்விடத்தை விட்டு அகற்றி,அவனுக்குத் தேவையான பொன், பொருள் உதவிகளைத் தந்து ஒரு குதிரையில் அமர்த்தி விடையளித்து வைத்தார்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x