Last Updated : 09 Oct, 2023 04:28 AM

 

Published : 09 Oct 2023 04:28 AM
Last Updated : 09 Oct 2023 04:28 AM

ப்ரீமியம்
கழுகுக் கோட்டை 15: சதுரங்க விளையாட்டும் சதிராடிய விதியும்

திருச்சேந்தியின் வசந்த மாளிகையின் சிறையில் அடைக்கப்பட்டிருந்தவர் வேறு யாருமல்ல. அவர் சந்திரகிரி தேசத்தை ஆண்டுவந்த சங்கடசேனனுக்கு வலதுகரமாக விளங்கி வந்த தென்திசை தளபதியான திருச்சேந்தியேதான். மக்கள் புரட்சிப்படைத் தலைவன் சண்டைக்கு அழைக்கிறான் என்று ஒரு முகமூடி அணிந்த மர்ம மனிதனுடன் சண்டைக்குப் போனபோதே திருச்சேந்தியின் தலைவிதி மாற்றி எழுதப்பட்டுவிட்டது. அதை இன்றும் நினைத்து வேதனையில் வெம்பிக்கொண்டிருந்தார் திருச்சேந்தி.

அவரது நினைவுகள் சுமார் இருபது வருடங்கள் பின்னோக்கிச் சென்றது. அதே சந்திரகிரி தேசத்தின் தென் திசைதளபதியாக திருச்சேந்தியின் தந்தையார் திருவிடங்கன் கோலோச்சிய காலம் அஃது. அப்போது திருச்சேந்தியும் அவருடன் சேர்ந்து பிறந்த சகோதரனான திருத்தோன்றியும் இளம்பிராயத்தில் இருந்தனர். அச்சுஅசலாக ஒன்றுபோலிருந்த அந்த இரட்டையர்களைப் பார்த்த அனைவரும் திருவிடங்கனின் வீரத்துக்கு ஏற்ற வாரிசுகள் இவர்களே என்று போற்றிப் புகழ்ந்தார்கள்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x