Published : 28 Aug 2023 04:30 AM
Last Updated : 28 Aug 2023 04:30 AM
திருச்சேந்தியும் முகமூடி அணிந்த புரட்சிப்படைக் கூட்டத்தின் தலைவனும் தங்களது வாளால் ஒருவரை ஒருவர் கடுமையாகத் தாக்கிக்கொண்டு இருந்தனர். அப்போது வாள்கள் ஒன்றோடு ஒன்று மோதிக்கொண்டபோது ஏற்பட்ட சத்தத்தால் கூடு திரும்பிய பறவைகள் அச்சம் கொண்டு வேறு திசையை நோக்கி விரைந்தன. திருச்சேந்தியின் வீரர்கள் தூரத்தில் இருந்து அந்தச் சண்டையைப் பார்த்துக்கொண்டிருந்தாலும் எந்நேரமும் அவரைக் காப்பாற்றும் ஆயத்தங்களுடனே இருந்தனர். அதேபோல முகமூடி அணிந்தவனின் ஆட்களும் எதிர் திசையில் நின்று கொண்டிருந்தனர். மாலைப் பொழுதும் மயங்கி இருள் சூழத் தொடங்கியது.
சண்டை கொஞ்சம் கொஞ்சமாக உக்கிரமானது. இப்போது முகமூடி அணிந்த மனிதனின் கை சற்று தாழ்ந்தது. இடது கைப் பழக்கம் கொண்டிருந்த திருச்சேந்தியும் வாளைச் சுழற்றிஅடித்து, முன்னால் முன்னேறிச் சென்றுகொண்டிருந்தார். இப்போது அவர்கள் ஓரிடத்தில் நில்லாமல் முன்னும் பின்னும் நகர்ந்து சண்டையிட்டார்கள். முகமூடி அணிந்தவன் திருச்சேந்தியின் உக்கிரமான தாக்குதலை தாக்கு பிடிக்க முடியாமல் பின்வாங்கிச் சென்றான். இப்போது அதைக்கண்ட திருச்சேந்தியின் வீரர்கள் ஆரவாரமாக கோஷம் எழுப்பினர்.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
உங்களின் உறுதுணைக்கு நன்றி !
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT