Last Updated : 24 Jul, 2023 04:28 AM

 

Published : 24 Jul 2023 04:28 AM
Last Updated : 24 Jul 2023 04:28 AM

ப்ரீமியம்
கழுகுக் கோட்டை 06: பல்லக்குத் தூக்கிகளான எம கிங்கரர்கள்

சாமியார் உண்டாக்கிய சாம்பிரானிப் புகை மூட்டத்தில் குணபாலன் மட்டும் சிக்கவில்லை. அவனைக் கைது செய்து அழைத்து வந்த வீரர்கள் மற்றும் அவர்களின் தலைவன் என அனைவருமே அந்தப் பெரும் புகையில் சிக்கி, மூச்சுத் திணறி மயங்கி வீழ்ந்தார்கள். குணபாலனுக்கோ, தான் மயங்கி விழுந்திருந்தாலும் தனது உயிர் அங்கேயே போய்விட்டதாக ஒரு தோற்றம் வந்தது. அதுமட்டுமல்ல, தன்னை இரண்டு எம கிங்கரர்கள் கைத்தாங்கலாகத் தூக்கிச் சென்று ஓர் அழகான பல்லக்கில் படுக்க வைத்ததைப் போல உணர்ந்தான்.

அந்தப் பல்லக்கை நான்கைந்துப் பேர் சேர்ந்துத் தூக்கிச் செல்வதும், அப்படி அவர்கள் தூக்கிச் செல்கையில் அந்தப் பல்லக்கு வலது, இடது என இருபுறமும் ஆடியதும் தெரிந்தது. சில நேரங்களில் மேலும் கீழுமாகவும் ஆடியது. மேலும் அந்தப்பல்லக்கு மேல் நோக்கியே சென்றுகொண்டிருந்ததால், பூமியிலிருந்து மேலோகத்துக்குத்தான் தன்னைக் கொண்டு செல்கிறார்கள். அதுவும் எமலோகத்துக்கு என்பதை மயக்கத்திலும் உறுதி செய்தான் குணபாலன்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x