Published : 18 Jul 2023 04:38 AM
Last Updated : 18 Jul 2023 04:38 AM

ப்ரீமியம்
நானும் கதாசிரியரே! - 10: உனக்கு ஓர் அழகு… எனக்கு ஓர் அழகு

சென்றப் பகுதியில், பாதிக் கதை கொடுத்து, வண்ணத்துப் பூச்சிகள் எங்கே சென்றன என்று கேட்டிருந்தோம். சிலர் அதற்கு ஏற்ற முடிவை எழுதி அனுப்பியிருந்தீர்கள். இதையே கொஞ்சம் மாற்றி விளையாடலாமா? அதாவது, இப்போது ஒரு கதையின் முடிவைத் தருகிறேன். அதற்கு முன்கதை என்னவென்று கண்டுபிடிப்போமா?

நீண்டதூரம் பறந்து சென்ற அந்தப் பறவை, ’இனிமேல் மயில் குஞ்சைத் தேடுவது வீண்’ என்று நினைத்தது. அதனால், அது திரும்பி, தன் கூட்டை நோக்கிப் பறக்கத் தொடங்கியது. ‘மயில் குஞ்சு எங்கே இருக்கோ… என்ன செய்கிறதோ… என்று நினைத்து வருத்தப்பட்டது. கூட்டின் வாசலில் மயில் குஞ்சு அமர்ந்திருந்தது. அதைப் பார்த்ததும் அந்தப் பறவை ஆனந்தக் கூத்தாடியது. அருகில் வந்து தன் சிறகால் வருடிக்கொடுத்தது. ’ஒரு சிறுவன் அந்தப் பூனையிடம் இருந்து காப்பாற்றினான்’ என்று தான் தப்பி வந்த கதையைச் சொன்னது மயில் குஞ்சு. இனிமேல் கவனமாகப் பார்த்துக் கொள்வேன் என்றது அந்தப் பறவை. மயில் குஞ்சுவும் மகிழ்ச்சியானது.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x