குழந்தைகளின்  கண் நோயைக் கண்டறிய  ‘ஆப்’

குழந்தைகளின்  கண் நோயைக் கண்டறிய  ‘ஆப்’
Updated on
1 min read

ஹூஸ்டன்

குழந்தைகளுக்கு ஏற்படும் ‘ரெடினோபிளாஸ்டோமா’ எனும் கண் புற்றுநோயை கண்டறிய புதிய ஸ்மார்ட்போன் செயலி ஒன்று கண்டுபிடிக்கபட்டுள்ளது.

இந்த ஆய்வை சயின்ஸ் அட்வான்ஸ் இதழ் வெளியிட்டுள்ளது. அமெரிக்காவில் உள்ள பேலர் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆய்வாளர்கள் இந்த செயலியில் உள்ள பயனுள்ள கருவியை லுகோகொரியா சிகிச்சைக்கு கண்டு பிடித்துள்ளனர்.

குழந்தைகள் வளர்ச்சி அடையும் போது பெற் றோர்களே அந்த கருவி மூலம் கண்டறிய இயலும். இந்த ஆய்வில் கண் கோளாறுடன் இருக்கும் குழந்தைகளை சுமார் 50,000 புகைப்படங்கள் எடுத்து பகுப்பாய்வு செய்துள்ளனர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in