Published : 05 Aug 2022 06:28 AM
Last Updated : 05 Aug 2022 06:28 AM

சிபிஎஸ்இ தேர்வில் தோல்வியடைந்தோருக்கு ஆக.23-ல் துணை தேர்வு

சென்னை: மத்திய இடைநிலைக்கல்வி வாரியத்தின் (சிபிஎஸ்இ) 12-ம் வகுப்பு மற்றும் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் தோல்வி அடைந்த மாணவர்களுக்கான துணை தேர்வு ஆகஸ்டு 23-ம்தேதி தொடங்குகிறது.

இரண்டு கட்டங்களாக நடத்தப்பட்ட பொதுத்தேர்வுகளில் 2-வது கட்டமாக நடத்தப்பட்டபொதுத் தேர்வு பாடத்திட்டத்தின் அடிப்படையில் துணை தேர்வு அமைந்திருக்கும், இத்தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் ஜூலை 30-ம் தேதி முடிவடைந்தது.

இருப்பினும் இதுவரை துணை தேர்வுக்கு விண்ணப்பிக்காமல் இருக்கும் மாணவர்கள் தாமதக் கட்டணம்ரூ.2000 செலுத்தி ஆகஸ்டு8-ம் தேதி வரை விண்ணப் பிக்கலாம் என்று சிபிஎஸ்இ அறிவித்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x