திருப்பூரில் 200 மாணவிகளுக்கு ரூ.7.50 லட்சம் கல்வி உதவித்தொகை மாவட்ட ஆட்சியர் விஜய கார்த்திகேயன் வழங்கினார்

திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அரசு பள்ளி மாணவிகளுக்கு ஆட்சியர்
க.விஜய கார்த்திகேயன் கல்வி உதவித்தொகை வழங்கினார்.
திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அரசு பள்ளி மாணவிகளுக்கு ஆட்சியர் க.விஜய கார்த்திகேயன் கல்வி உதவித்தொகை வழங்கினார்.
Updated on
1 min read

திருப்பூர் மாவட்ட அரசுப் பள்ளிகளில் படிக்கும் 200 ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியின மாணவியருக்கு ரூ.7.50 லட்சம் மதிப்பிலான கல்வி உதவித் தொகையை ஆட்சியர் விஜயகார்த்திகேயன் வழங்கினார்.

கனரா வங்கி நிறுவனர் நாள் விழாவை முன்னிட்டு, திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், மாவட்டத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் பயிலும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர்க.விஜயகார்த்திகேயன் கலந்துகொண்டு கல்வி உதவித்தொகை வழங்கினார். அவர் பேசியதாவது:கனரா வங்கி நிறுவனரின் 114-வதுபிறந்த நாளை முன்னிட்டு, திருப்பூர்மாவட்டத்தில் உள்ள நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகளில் பயிலும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் வகுப்பை சார்ந்த சுமார் 200 மாணவியருக்கு, ரூ.7.50 லட்சம் மதிப்பில் கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளது.

பள்ளிகளில் பயிலும் மாணவ,மாணவிகளுக்கு இந்த உதவித்தொகையானது, மிகவும் உதவிகரமாக இருக்கும். பள்ளிகளில் நடைபெறும் அனைத்து வகையான போட்டிகளிலும் முழு தன்னம்பிக்கையுடன் பங்கேற்று, தங்களது முழுத்திறமையையும் வெளிப்படுத்த வேண்டும். உதவித் தொகையினை பெறும் மாணவியர்கள் நல்ல முறையில் கல்வி பயின்று, தங்கள் வாழ்வில் மென்மேலும் உயர வாழ்த்துகிறேன். இவ்வாறு ஆட்சியர் விஜயகார்த்திகேயன் பேசினார்.

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள 29 அரசு பள்ளிகளைச் சேர்ந்த5 முதல் 7ம் வகுப்பு வரை பயிலும், 100 மாணவிகளுக்கு தலா ரூ.2,500 மற்றும் 8-ம் வகுப்பு முதல் 10-ம்வகுப்பு வரை பயிலும் 100 மாணவிகளுக்கு தலா ரூ.5,000 என ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவிகளுக்கு உதவித்தொகை வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் இரா. ரமேஷ், கனரா வங்கி மண்டல துணை பொது மேலாளர் ஈஸ்வரமூர்த்தி, மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் சத்தியமூர்த்தி, உதவி பொது மேலாளர் பாலசுப்பிரமணியம் மற்றும் பள்ளி மாணவிகள் பங்கேற்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in