Published : 24 Feb 2023 06:06 AM
Last Updated : 24 Feb 2023 06:06 AM

என்எம்எம்எஸ் தேர்வு நாளை நடக்கிறது: 2.75 லட்சம் பேர் பங்கேற்பு

சென்னை

கல்வி உதவித்தொகைக்கான என்எம்எம்எஸ் தேர்வு தமிழகம் முழுவதும் நாளை (சனிக்கிழமை) நடைபெறுகிறது. இத்தேர்வை 2.75 லட்சம் மாணவ, மாணவிகள் எழுதுகின்றனர்.

மத்திய அரசின் தேசிய வருவாய்வழி மற்றும் திறன் படிப்பு உதவித்தொகைத் திட்டத்தின் (என்எம்எம்எஸ்) கீழ் அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் 8-ம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை அளிக்கப்பட்டு வருகிறது. இதற்காக ஆண்டுதோறும் மாணவர்களுக்கு என்எம்எம்எஸ் தேர்வு நடத்தப்படும். இந்த தேர்வின் மூலம் தமிழகத்தில் 6,695 பேர் உட்பட நாடு முழுவதும் ஒரு லட்சம் மாணவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். அவர்களுக்கு 9-ம் வகுப்பு முதல் பிளஸ் 2 முடிக்கும் வரை மாதம் ரூ.1,000 உதவித்தொகை வழங்கப்படும்.

ஏற்கெனவே அறிவிக்கப்பட்டபடி, என்எம்எம்எஸ் தேர்வு நாளை (பிப்.25) நடைபெற உள்ளது. இந்த தேர்வை 2.75 லட்சம் மாணவர்கள் எழுதவுள்ளனர். இதற்காக தமிழகம் முழுவதும் 847 தேர்வு மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x