

புதுக்கோட்டை: ஆலங்குடி வட்டம் வடகாடு ஊராட்சி புள்ளாச்சியை சேர்ந்தவர் கூலித் தொழிலாளி அய்யப்பன். இவரது உடல் நிலை சரியில்லாததால் சென்னையில் தங்கியுள்ளார். இவரது மகள் லக்சயா (11) வடகாடு அரசு மேல்நிலைப் பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வருகிறார். பாட்டி வீட்டில் இருந்து பள்ளிக்கு செல்கிறார்.
பள்ளிக்கு வழங்குவதோடு, பிற சேவைகளுக்கும் ஆதார் அட்டை அவசியமாக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், கடந்த ஆண்டு ஜூன் மாதத்தில் இருந்து ஆலங்குடி வட்டாட்சியர் அலுவலக மற்றும் அஞ்சல் அலுவலக ஆதார் பதிவு மையங்களில் ஆதார் அட்டைக்காக 4 முறை புகைப்படம், விரல் ரேகை, கருவிழி புகைப்படங்களுடன் லக்சயா பதிவு செய்துள்ளார்.
இதுவரை ஆதார் அட்டை கிடைக்காததால் உடல் நலிந்த பாட்டியோடு அலைந்து வருகிறார். ஆதார் அட்டை கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரசுக்கு மாணவி கோரிக்கை வைத்துள்ளார். இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.