Published : 03 Feb 2023 06:15 AM
Last Updated : 03 Feb 2023 06:15 AM
திருச்சி: திருச்சி திருவெறும்பூர் செல்லம்மாள் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி ஆண்டு விழாவில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி பேசுகையில், “குழந்தைகளிடம் எதையும் பெற்றோர் திணிக்கக்கூடாது. அப்பா, அம்மா எவ்வளவு கஷ்டப்படுகின்றனர் பார்த்தியா, நீ நல்லா படி, படி என சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. பெற்றோர்களின் கஷ்டத்தை பார்த்துக் கொண்டு தான் உள்ளனர். அதை எப்படி கொடுக்க வேண்டும் என்பது குழந்தைகளுக்கு தெரியும்.
எப்போது பார்த்தாலும் குழந்தைகளை கண்டிக்காமல், அவர்களை பெற்றோர் ஊக்கப்படுத்த வேண்டும். குழந்தைகளிடம் அவ்வப்போது ஆசையாக பேசுங்கள். நீங்கள் எந்த அளவுக்கு குழந்தைகள் மீது அன்பு வைத்திருக்கிறீர்களோ அதை விட இரு மடங்கு அன்பை குழந்தைகள் பெற்றோர் மீது வைத்திருக்கின்றனர். அதை மனதில் வைத்து பெற்றோர் செயல்பட வேண்டும்” என்று கேட்டுக் கொண்டார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT