

கோவில்பட்டி: அகில இந்திய கராத்தே போட்டியில் விளாத்திக்குளம் அம்பாள் வித்யாலயா சிபிஎஸ்இ பள்ளி மாணவர்கள் 8 பதங்கம் உள்பட 18 பதக்கங்கள் வென்றுள்ளனர்.
கோவா மாநிலம் வாஸ்கோட காமாவில் அகில இந்திய அள விலான கராத்தே போட்டி நடந் தது. இதில், தமிழகம், கேரளா, ஆந்திரா, கர்நாடகா, கோவா ஆகிய மாநிலங்களில் இருந்து ஏராளமான மாணவர்கள் கலந்து கொண்டனர்.
தமிழ்நாட்டிலிருந்து பங்கேற்ற விளாத்திகுளம் ஸ்ரீ அம்பாள் வித்யாலயா சிபிஎஸ்இ பள்ளி மாணவ மாணவிகள் கட்டா பிரிவு, சண்டை பிரிவில்8 தங்கப்பதக்கங்கள், 6 வெள்ளி பதக்கங்கள், 4 வெண்கல பதக்கங்கள் என மொத்தம் 18 பதக்கங்கள் பெற்றனர்.
பதங்கங்கள் வென்ற மாணவ மாணவிகளை அம்பாள் வித்யாலயா பள்ளி நிர்வாகி மாா்கண்டேயன் எம்எல்ஏ, பள்ளியின் தாளாளர் வீமராஜ், செயலாளர் சுப்பா ரெட்டியார், பள்ளி இயக்குநர் இந்திரா ராமராஜு, பள்ளி முதல்வர் ஆபிரகாம் வசந்தன், கராத்தே பயிற்சியாளர் முத்து ராஜா ஆகியோர் பாராட்டினர்.