Published : 19 Jan 2023 06:12 AM
Last Updated : 19 Jan 2023 06:12 AM
பெங்களூரு: கர்நாடகா உயர் நீதிமன்றத்தில் சிவில் நீதிபதிகள் பதவி இடங்களுக்கு ஆன்லைனில் நேரடி தேர்வு நடைபெற்றது.
இந்த தேர்வில் கோலார் மாவட்டம் பங்காருபேட்டையை சேர்ந்த நாராயணசாமி-வெங்கடலட்சுமி தம்பதியின் மகள் என்.காயத்ரி (வயது 25) கலந்துகொண்டார். இந்த தேர்வில் என். காயத்ரி தேர்ச்சி பெற்றுள்ளார். விரைவில் இவர் உயர் நீதிமன்ற சிவில் நீதிபதியாக பதவி ஏற்க உள்ளார்.
பங்காருபேட்டை அருகே காரஹள்ளியில் உள்ள அரசு தொடக்கப் பள்ளி மற்றும் உயர்நிலைப் பள்ளியில் பள்ளி படிப்பை முடித்தஎன்.காயத்ரி கோலார் தங்கவயலில் உள்ள கெங்கல் அனுமந்தராய்யா சட்டக்கல்லூரியில் சட்டப்படிப்பை முடித்தார். அவர் பல்கலைக்கழக அளவில் 4-வது இடத்தை பிடித்தவர் தற்போது சிவில் நீதிபதியாக தேர்வாகி உள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT