Published : 18 Jan 2023 06:08 AM
Last Updated : 18 Jan 2023 06:08 AM

தென்காசி | மங்களபுரம் மருதம் இலவச பயிற்சி மையத்தில் இந்து தமிழ் திசை “இயர் புக்” வழங்கும் விழா

தென்காசி: தென்காசி மாவட்டம், கடையநல்லூர் வட்டம், மங்களபுரம் மருதம் இலவச பயிற்சி மையத்தில் போட்டித் தேர்வுகளுக்கு படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு இந்து தமிழ் திசை நாளிதளின் 2023-ம் ஆண்டுக்கான ‘இயர் புக்’ வழங்கும் விழா நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு கிங் ஆஃப் கிங்ஸ் நிறுவனங்களின் தாளாளர் பிஷப் எட்வர்ட் ராஜன் தலைமை வகித்தார். ருக்மணி கல்வியியல் கல்லூரி தாளாளர் செல்வராஜ் முன்னிலை வகித்தார். மருதம் பயிற்சி மையத்தின் நிறுவனர் முத்துக்குமார் வரவேற்று பேசினார்.

சமூக சேவகரும் பாஜக வெளிநாடு மற்றும் அண்டை மாநில தமிழ் வளர்ச்சி பிரிவு மாநில துணைத் தலைவருமான ஆனந்தன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு மாணவ, மாணவிகளுக்கு இந்த ஆண்டுக்கான இந்து தமிழ் திசை ‘இயர் புக்’ வழங்கினார். அப்போது அவர் பேசும்போது, “மத்திய, மாநில அரசின் போட்டித் தேர்வுகளுக்கு பயன்படும் வகையில் இந்து தமிழ் திசை ‘இயர் புக்’ வடிவமைக்கப்பட்டு உள்ளது.

இதில் ஏராளமான தகவல்கள் தொகுக்கப்பட்டு இருக்கின்றன. ஆங்கிலத்தில் தரமான ‘இயர் புக்’ வருவது போல் தமிழில் வரவில்லையே என்ற குறையை போக்கும் வகையில் இந்து தமிழ் திசையின் ‘இயர் புக்’ அமைந்துள்ளது. எனவே, பல்வேறு போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும் மாணவ, மாணவிகள் இந்த புத்தகத்தை வாங்கி பயன்பெற வேண்டும்” என்றார்.

நிறைவில், மருதம் பயிற்சி மைய ஒருங்கிணைப்பாளர் செல்வக்குமார் நன்றி கூறினார். இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பயிற்சி மைய ஆசிரியர்கள் செய்திருந்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x