Published : 13 Dec 2022 06:10 AM
Last Updated : 13 Dec 2022 06:10 AM

வங்கிக்கு களப்பயணம் சென்ற பள்ளி மாணவர்கள்

தேவகோட்டை: சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி மாணவர்கள் தாழையூர் பாரத ஸ்டேட் வங்கிக்கு நேரடியாக களப்பயணம் சென்றனர்.

இந்த நிகழ்வுக்கு வங்கி கிளை மேலாளர் நாகம்மை தலைமை தாங்கினார். பள்ளி தலைமை ஆசிரியர் லெ.சொக்கலிங்கம் முன்னிலை வகித்தார். வங்கி அலுவலர் கோவிந்தலிங்கம் வங்கிச் செயல்பாடுகள் குறித்து மாணவர்களுக்கு விளக்கினார்.

வங்கியில் அமைந்துள்ள ஒவ்வொரு பிரிவுக்கும் மாணவர்களை அழைத்து சென்று விளக்கம் அளித்தார். பணம் செலுத்தும் படிவம், பணம் எடுக்கும் படிவம், காசோலை எடுக்கும் படிவம், நகைக் கடன் செலுத்துவது, செலுத்திய பணத்தை எடுப்பது, ஏ டி எம் இயந்திரத்தினை பயன்படுத்துவது எவ்வாறு என்று எடுத்துரைத்தார்.

நி்றைவில், வங்கி மேலாளரிடம் மாணவர்கள் சந்தேகங்கள் கேட்டுபதில்கள் பெற்றனர். மாணவர்களை ஆசிரியை செல்வமீனாள் அழைத்து சென்றார். இந்த களப்பயணம் மிகவும் பயனுள்ளதாக இருந்தது என்று மாணவர்கள் தெரிவித்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x