Published : 08 Dec 2022 06:07 AM
Last Updated : 08 Dec 2022 06:07 AM

தேசிய ரோலர் ஸ்கேட்டிங் போட்டியில் அரசு பள்ளி மாணவர்கள்

சென்னை: பெங்களூரில் நடைபெறவுள்ள தேசிய அளவிலான ரோலர் ஸ்கேட்டிங் போட்டியில் திருச்சிபீமநகர் மாநகராட்சி நடுநிலைப் பள்ளி மாணவர்கள் 2 பேர் பங்கேற்கின்றனர்.

திருச்சி பீமநகர் மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் 3-ம் வகுப்பு மாணவர் ஆர்.பிரியதர்ஷன், 5-ம்வகுப்பு மாணவர் ஆர். தேவதர்ஷன் ஆகிய இருவரும் கடந்த நான்கு ஆண்டுகளாக திருச்சி வடுகபட்டி ஹாக்கர்ஸ் கிளப்பில் தலைமைப் பயிற்சியாளர் பசூல் கரிமிடம் ரோலர் ஸ்கேட்டிங் பயிற்சி பெற்றனர்.

மாணவர்களுக்கு பாராட்டு: இவர்கள் இந்தாண்டு நடைபெற்ற 32-வது ஆண்டு மாநில அளவிலான ரோலர் ஸ்கேட்டிங் போட்டியில் திருச்சி அணிக்காக 11 வயதிற்குட்பட்ட போட்டியில் இரண்டு பிரிவுகளிலும் பங்கேற்று முதல் பரிசு பெற்றனர். இதையடுத்து பெங்களூருவில் டிசம்பர் 11 முதல் 22-ம் தேதி வரைநடைபெறும் 60-ம் ஆண்டு தேசிய அளவிலான ரோலர் ஸ்கேட்டிங் போட்டிக்கு மாணவர்கள் இருவரும் தேர்வாகியுள்ளனர்.

அவர்களுக்கு பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள், பள்ளி மேலாண்மைக் குழு, கிராமக் கல்விக் குழு, மற்றும் பெற்றோர் ஆசிரியர் கழகத்தினர் பாராட்டு தெரிவித்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x