Published : 23 Nov 2022 06:13 AM
Last Updated : 23 Nov 2022 06:13 AM

உத்தராகண்டில் 36 பாலங்கள் பாதுகாப்பற்றவை

டேராடூன்: குஜராத் மாநிலத்தில் சமீபத்தில் தொங்கு பாலம் அறுந்து விழுந்த விபத்தில் 135 பேர் உயிரிழந்தனர். இந்த விபத்து நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில், உத்தராகண்ட் மாநில முதல்வர் புஷ்கர் சிங் தாமியின் அறிவுறுத்தலின் பேரில் மாநிலத்தில் உள்ள 5 மண்டலங்களில் நடத்தப்பட்ட பாதுகாப்பு தணிக்கையில் 36 பாலங்கள் போக்குவரத்துக்கு தகுதியற்றவை என கண்டறியப்பட்டுள்ளது. மாநிலத்தில் உள்ள 3262 பாலங்களில் 2618 பாலங்களில் மேற்கொள்ளப்பட்ட பாதுகாப்பு தணிக்கையை பொதுப்பணித்துறை அதிகாரிகள் மாநில அரசிடம் சமர்ப்பித்துள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x