Published : 23 Nov 2022 06:06 AM
Last Updated : 23 Nov 2022 06:06 AM
சென்னை: தமிழகத்தில் கடந்த வாரம் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து மாநிலம் முழுவதும் பரவலாக கனமழை பெய்தது. இந்நிலையில் தென்மேற்கு வங்கக் கடலில் சில நாட்களுக்கு முன்பு குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவானது. இது தமிழகம், புதுச்சேரி, ஆந்திராவை நோக்கி நகரக்கூடும் என்றும் அதனால் மிக கனமழை பொழியும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்தது.
ஆனால் குறைந்த காற்றழுத்தம் எந்த வேகத்தில் வலுவானதோ, அதேவேகத்தில் வலு இழந்தது. இதனிடையே தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பனிப்பொழிவு அதிகமாக இருப்பதற்கு என்ன காரணம் என்று சென்னைஆய்வு மைய அதிகாரி கூறுகையில். “குளிர் காற்று வடக்கு பகுதியில் இருந்து தெற்கு பகுதியை நோக்கி வீசுவதால் பனிப்பொழிவு அதிகமாக இருக்கிறது” என்று தெரிவித்தார்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT