Published : 01 Nov 2022 06:04 AM
Last Updated : 01 Nov 2022 06:04 AM

ப்ரீமியம்
மாற்றம் மட்டுமே மாறாதது

காமாட்சி ஷியாம்சுந்தர்

மாற்றம் ஒன்று மட்டுமே மாறாதது. நேற்றைய தினம் இன்று இருப்பதில்லை. கடந்த நொடியினை மீண்டும் பெற முடியாது. மாற்றம் என்பது காலநிலையில் மட்டுமல்ல; மனிதனின் மனத்திலும் மாற்றம் வேண்டும். ஏதோ ஒரு காரணத்திற்காக சகோதர, சகோதரிகளிடம் கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருக்கலாம். மனதில் மாற்றம் ஏற்பட்டு மீண்டும் அவர்களிடம் மனம் விட்டுப் பேசுகின்ற மனோநிலை ஏற்பட வேண்டும். சின்ன சின்னஞ்சிறு காரணங்களுக்காக சக ஊழியர்களிடம் கோபப்பட்டு இருக்கலாம்; "விட்டுக் கொடுப்பவர்கள் கெட்டுப் போவதில்லை". எனவே கோபப்படும் மனோநிலையை மாற்றிக் கொள்வதில் தவறில்லை.

நிர்வாகப் பொறுப்பினில் இருக்கும்போது மாற்றுக் கருத்துக்கள் வந்தால் ஏற்றுக் கொள்வதில் தவறில்லை. மாற்றுக் கருத்துகளே நிர்வாகத்தின் மேம்பாட்டினை கொண்டுவர மூல காரணமாக இருக்கின்றன. சுற்றி வருகின்ற பூமிகூட ஒரு நொடிப் பொழுதும் நிலையாக இருப்பதில்லை. நேற்றுபூத்த அதே பூ. இன்றுஅந்தச் செடியில் நிலையாக இருப்பதில்லை. மாணவனும் அப்படியே என்பதை ஆசிரியர்கள் நாம்தான் உணர்ந்து செயல்பட வேண்டும்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x