Published : 19 Oct 2022 06:04 AM
Last Updated : 19 Oct 2022 06:04 AM
அகமதாபாத்: குஜராத்தில் மக்களுக்கு தீபாவளி பரிசாக குடும்பத்துக்கு தலா 2 எரிவாயு சிலிண்டர்கள் இலவசமாக வழங்கப்படும் என்று மாநில அரசு அறிவித்துள்ளது.அகமதாபாத்தில் செய்தியாளர்களிடம் பேசிய மாநில கல்வி அமைச்சர் ஜித்து வஹானி, ‘‘ குடும்பத்துக்கு 2 இலவச எரிவாயு சிலிண்டர்களை வழங்க அரசு முடிவு செய்துள்ளது. ஏழைகளுக்கு இலவச சமையல் எரிவாயு இணைப்பு திட்ட பயனாளிகள் இந்த சலுகையைப் பெறுவார்கள். மேலும், குழாய் வழியே கொண்டு செல்லப்படும் இயற்கை எரிவாயுவுக்கு 10 சதவீத வாட் வரி குறைக்கப்படும். இது மக்களுக்கு அரசின் தீபாவளி பரிசு’’ என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT