Published : 29 Sep 2022 06:04 AM
Last Updated : 29 Sep 2022 06:04 AM
சென்னை: அரசு பள்ளியில் படித்து 7.5 சதவீத உள் ஒதுக்கீட்டில் மருத்துவ படிப்பில் ஒவ்வொரு ஆண்டும் சிலருக்கு இடம் கிடைத்து வருகிறது. அந்த வகையில் 2020-ல் 433 பேருக்கும், 2021-ல் 554 பேருக்கும் மருத்துவ படிப்புகளில் இடங்கள் கிடைத்தன.
இதில் கடந்த ஆண்டில் 336 பேருக்கு எம்.பி.பி.எஸ். இடங்களும், 97 பேருக்கு பி.டி.எஸ். இடங்களும் கிடைத்து இருந்தன. இந்த நிலையில் எம்.பி.பி.எஸ் முதலாம் ஆண்டு தேர்வு முடிவு சமீபத்தில் வெளியானது. அந்த தேர்வில் அரசு பள்ளியில் படித்து எம்.பி.பி.எஸ் படிப்பில் சேர்ந்து முதலாம் ஆண்டு தேர்வை எழுதிய 75 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்று இருப்பதாகவும் மீதமுள்ள மாணவர்களில் 85 சதவீதம் பேர் தேர்ச்சி அடைந்து இருப்பதாகவும் மருத்துவ கல்வி இயக்கக வட்டாரங்கள் தெரிவித்தன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT